அம்மா...!

உன் உயிர் தந்து என்உயிர் வளர்த்ததாயே!!

 தரணியில்நானும் அவதாரம்
எடுத்திட துணையாய் இருந்தவளே!!

 ஈரைந்து மாதங்கள் எனைகருவாய் வயிற்றில் சுமந்தவளே!!

 பசியால்நீ வாடிடும்போதும் நான்பசியறியாது செய்தவளே!!

 நோயினால்நீ வாடியபோதும் என்மனம் நோகாமல் பார்த்தவளே!
!
 உன்னை என்னவென்று நான்சொல்வேன்…

 நீதெய்வம்என்று சொன்னால்கூட உனக்குஅது இழுக்குதான்…!!

 நீதெய்வத்துக்கு மேலேதான் என்மனதில்…!!

Comments