ஒரு பார்வையால ஒராயிரம்
கதை சொல்லி
என்னை பதறவைக்கும் உன்
கண்கள் பிடிக்கும். . !
நிலவுக்குள் மின்னலடித்தது போல்
என்னை நோக்கி
நீ வீசும் உன் புன்னகை
பிடிக்கும். . !
நள்ளிரவில் தெரியும் நட்சத்திரமாய்
உன் கூந்தலில் ஒய்யாரமாய்
உட்கார்ந்திருக்கும்
ஒற்றை ரோஜா பிடிக்கும். . !
ஆயிரம் பேருக்கு மத்தியில்
நீ வந்தாலும்
உன்னை எனக்கு உணர்த்தும்
உன் கொலுசின்
ஒலி பிடிக்கும். . !
தேர் கொண்ட பார்வையால் நான்
பார்க்கும் போதெல்லாம்
நானிக் கவிழும் உன்
பெண்மை பிடிக்கும். . !
உன்னில் எல்லாம் எனக்கு
பிடித்துப்போக
நீ எப்போது உன் செல்விதழால்
சொல்வாய்
என்னை பிடிக்குமென்று.
Comments
Post a Comment