நண்பர்களே இது என்னோட பத்தாம் வகுப்பு கவிதை
பிடித்து இருந்தால்
மறக்காமல் கமெண்ட் செய்யவும்
பள்ளி நாட்களில் நாங்கள் கண்ட இன்ப துன்பம்
என்றும் மறவாது
என்றும் நிலைத்து இருப்பது என்றும் அழியாதது
ஆண்கள் பெண்களிடம் பூத்த பூ
நட்பு என்னும் அழியா பூ
ஆசிரியர் மாணவரிடம் பூத்த பூ
அன்பு என்னும் அழகான பூ
பள்ளி மாணவர்களிடம் பூத்த பூ
நகைப்பு என்னும் நகைசுவை பூ
தலைமை ஆசிரயர் மற்றும் மாணவரிடம்
பூத்த பூ
வெறுப்பு என்ற வெந்த பூ
இதை எல்லாம் கடந்த நாங்கள்
பள்ளி இறுதி நாளில்
நாங்கள் ஒன்றாக கூடிய வேளையில்
பிரிவு என்ற சோகம் வந்தது
நாங்கள் செய்த சேட்டைகளால் பெற்ற
தண்டனையோ பல
அன்றெல்லாம் சிறிதும் வருந்தாத நாங்கள்
இன்று வருந்துகிறோம்
பெருகியது வெள்ளம்
ஒவ்வொரு மாணவரின் கண்களிலும்
ஆனால் நாட்கள் உண்டு
என்றாவது ஒரு நாள் இணைவோம்
அது வரை நாங்கள் எங்கு இருந்தாலும்
எங்கள் நட்பு தொடரும்
இப்படிக்கு ,
நட்புடன் ,
அரவிந்த் யோகன் .
Comments
Post a Comment