மனசே!
மனசை தொட்டு
மனதார சொல்கிறேன்
மனம் வருந்தாதே!
உனக்கு அழைப்பு எடுக்கும்
ஒவ்வொரு கணங்களும்
என் மனதில் ஏதோ
சிறிதாக நெருடல்!
உனக்கு அது தொலைபேசி
எனக்கு அது தொல்லைபேசி
உன்னோடு பேசும்
ஒவ்வொரு நிமிடமும்
அலைவரிசை குழப்பத்தால்
உண்டாகும் கோவத்தில்
உன்னை நான்
காயப்படுத்திடுவேனா என்று!
கவலை கொள்ளாதே!
தடங்கலின் போது
நான் கோவிப்பது
உன்னை அல்ல
உன் தொலைபேசியை மட்டும் தான்
அன்பாக பேச எடுத்தால்
அதற்கும் ஒரு விக்கல்
அவசரமாய் பேச எடுத்தால்
அடிக்கடி கட்
பொறுமைக்கும் எல்லை உண்டு
போதும் இந்த நச்சரிப்பு
சீக்கிரமாய் செயல்படு
மாற்றி விடு உன் சிம் காட்டை.!!
Comments
Post a Comment