மழைக்கு மட்டுமே
குடை பிடித்து நடந்தவன்
வெயிலுக்கும் குடை பிடித்து
நடந்தது உன்னோடுதான் !
நிலவுக்காக மட்டுமே
வானத்தை பார்த்து ரசித்தவன்
அம்மாவாசைக்கும் வானத்தை
ரசித்தது உன்னோடுதான் !
அலைகளை ரசிக்க மட்டும்
கடலுக்கு வந்தவன்
அமைதிக்காகவும் கடற்கரை
வந்தது உன்னோடுதான் !
இசைக்காக மட்டுமே குயிலை
ரசித்தவன்
இனிமைக்காகவும் குயிலை
நேசித்தது உன்னோடுதான் !
நான் வீழ்ந்தால் உன்
காதலோடு மட்டும்தான் !!
நான் வாழ்ந்தால் உன்னோடு
மட்டும்தான் !!
Comments
Post a Comment