வாழ்ந்தால் உன்னோடு-kathal kavithai

மழைக்கு மட்டுமே
குடை பிடித்து நடந்தவன்

வெயிலுக்கும் குடை பிடித்து
நடந்தது உன்னோடுதான் !

நிலவுக்காக மட்டுமே
வானத்தை பார்த்து ரசித்தவன்

அம்மாவாசைக்கும் வானத்தை
ரசித்தது உன்னோடுதான் !

அலைகளை ரசிக்க மட்டும்
கடலுக்கு வந்தவன்

அமைதிக்காகவும் கடற்கரை
வந்தது உன்னோடுதான் !

இசைக்காக மட்டுமே குயிலை
ரசித்தவன்

இனிமைக்காகவும் குயிலை
நேசித்தது உன்னோடுதான் !

நான் வீழ்ந்தால் உன்
காதலோடு மட்டும்தான் !!

நான் வாழ்ந்தால் உன்னோடு
மட்டும்தான் !!

Comments