Tamil amma kavithai - அன்னையர் தினம்

ANNAIYAR THINA KAVITHAI, thaai kavithai in tamil

Annaiyar thina kavithaigal 2015

ஓர் ஓசையில் இத்தனை அர்த்தங்களா. . .
 அம்மா. . .

குழந்தையின் மழலையில் குழல் தரும் ஓசை . .
 அம்மா. . .

பால் தரும் பசுவும் பகிர்ந்திடும் ஓசை . . .
 அம்மா. . .

பசித்திடும் ஏழையின் பாவ மொழி ஓசை. . . .
 அம்மா. .
.
அடிக்கையில் அனைவரும் அலறிடும் ஓசை. . . .
அம்மா. . .

பருவத்தின் ஸ்பரிசத்தில் பரவசத்தின் வார்த்தை. . .
அம்மா. . .

முதுமையின் வலியிலும் முனகிடும் வார்த்தை. . .
அம்மா. . .

சொன்னாலும் முடியாது சொல்லாமல் தீராது. . .
அம்மா. . .

இருக்குதோ தமிழில் இதை விட சிறந்த வார்த்தை. . .
அம்மா. . .

ஆதலால் அதுதானே அழகு தமிழ் முதல் ஓசை. . . ! ! !
அம்மா!!!!!!!!!!

 அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !!!

Tags:
அன்னையர் தின கவிதைகள், amma kavithai in tamil font, annaiyar thina kavithaigal,
annaiyar thina vaalthu kavithaikal in tamil font, mothers day poem in tamil font 2015

Comments