நான்தான் மலடானேன்
ஊராரும் உறவினர்களும்தான் நகைக்க ..
பூக்கின்ற காலத்திலே பூவாமல் போனேனே …
காய்க்கின்ற காலத்திலே காய்க்காமல் போனேனே ..
தாலாட்டுபாட நான் இருந்தும்
தொட்டிலிட பிள்ளையில்லை …
வாரிஅணைக்க கைகள் இருந்தும்
வாகாய் பிள்ளையில்லை …
முதுகினிலே டோலிகட்டி மூச்சு முட்ட
அணைக்க பிள்ளையில்லை …
வட்டிலிலே சோறு போட்டால்
வாரி உண்ண பிள்ளையில்லை ….
தட்டினிலே போட்ட சோற்றை
இறைத்து உண்ண பிள்ளையில்லை …
பரந்த கூடத்திலே பாங்குடன் விளையாட
பிள்ளையில்லை …
பாத்து பாத்து கட்டின வீட்டில பாசமாய் இருக்க
பிள்ளையில்லை ….
மழை பெய்த முற்றத்திலே
வீட்டுல இருக்கும் சாமானை வீதியில
போட்டுடைக்க பிள்ளையில்லை ..
தவமாய் நான் கிடக்க தவழ பிள்ளையில்லை ……
என் தரத்துப் பெண்களெல்லாம்
எழிலான பிள்ளைகளுக்கு தாயானார் …
பிள்ளையில்லா வீடென்றால் பிச்சைக்கூட வாங்கார் ……..
இடுகாடு நான் போனாலும் கொள்ளி வைக்க நாதியில்லை …..
அன்னை நான் இருக்க
அம்மா என அழைக்க பிள்ளையில்லை … ☻
தொடர்புடைய பதிவுகள் :
♥மலர்களைப் போல-vaalkai kavithai
♥அயல்நாட்டு இந்தியர்கள்-soga varikal
♥ஏழையின் வியர்வை-vaalkai kavithai
♥கல்வி ஒளி-kulanthai tholilaalar
♥வெற்றி-Unmaiyaana vetri
Comments
Post a Comment