Uyir piriyum nerathil kanavanukkaga
padaikka patta UNMAI kanneer kavithai
காதல் கணவனே ,
உடைந்த படகில்
துடுப்பற்ற என் வாழ்க்கை ,
துடுப்பாய் வந்தீர்கள் நீங்கள் .
கடல் போல் நாம் இணைந்தோம் ,
படகு உடைந்து இருப்பதை அறியாமல் ,
வாழ்க்கை பயணத்தை தொடங்கிய
சில நாளிலே
நீரோடு அடித்து பட்டேன் ,
திரும்ப வரமுடியாத பாதையில்.!
வருந்தாதே மனமே ,
உங்கள் கண்கள் கலங்குவதை பார்க்க
உங்களிடம் உண்மையை சொல்ல மறுத்தேன் …..!!
நமது குழந்தையாக நான் பிறப்பேன் ,
உங்கள் கண்ணீர் துடைக்க ..!
தனியாக தவிக்க விட்டேன் என்று
வருந்தாதே மனமே ,
உன் சாதனைகள் தொடர்ந்திட ,
நமது குழந்தை சரித்திரம் படைக்க
நீங்கள் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் ..!!
உங்கள் கரம் பிடித்த நாட்களே ,
என் வாழ்வின் சிறந்த தருணங்கள் …!
அனைத்திலும் வெற்றி பெற்றேன்,
காதலில் கூட ,
ஆனால் தோற்று விட்டேன்
தாயாக குழந்தை வளர்ப்பதில் ..!!
கள்ளங்கபடமற்ற மனதோடு ,
எனக்கு தோழனாக, தந்தையாக விளங்கிய
என் காதல் கணவனே
நீ சிந்தும் கடைசி துளி கண்ணீர்
இதுவாக இருக்கட்டும் ,
உன் கண்ணீர் துளிகள் , விதையாக இருக்கும்
நம் குழந்தைக்கு உரமாக மாறி,
அவன் /அவள் வாழ்கையில் சிறக்க வழி செய்யட்டும் !!
இப்படிக்கு ,
பிரியும் வேளையில் பிரியா மனதுடன்
உங்கள் காதல் மனைவி !!!
பிரியா 🙁
நண்பர்களே ,
இது என் உயிர் தோழியின் வேண்டுடுதலுகினங்க
என்னால்
கண்ணீர் மல்க எழுத பட்ட முதல் கவிதை 🙁
தயவு செய்து
இந்த கவிதையை மட்டும் SHARE செய்யாதீர்கள் !!
Comments
Post a Comment