கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

கர்வம்பிடித்த கவிஞன்நான் ….

காலனிடம் மாட்டும்வரை காலிரண்டும் ஓயாது …

தேடித்தேடி தொலைந்தாலும்
தேடும்எண்ணம் தோயாது …

காலம்என்னை கட்டிப்போட்டு

கலகலவென சிரித்தாலும் …

வான்கிரகம் அத்தனையும் வந்து என்னை மிதித்தாலும் …

அண்டமே அதிரும்படி
அன்னைதமிழில் கவிபடிப்பேன் …

பஞ்சபூதம் அத்தனையும்
நெஞ்சடைக்கும் நிலைகொடுப்பேன்

விஞ்ஞானமே வியக்குமளவு
மெஞ்ஞானத்தை இயக்குவேன் …

செந்தமிழால் வேற்றுகிரக வாசியையும் மயக்குவேன் …

ஊழ்வினைக்கும் என்னெழுத்தால்


உபதேசம் வழங்குவேன் ..

உயிர் போன பின்னாலும்
உலகத்தில் இயங்குவேன் …

என்னுடைய சரித்தில்
இடம்பெரும்நாள் எந்தநாளோ …?

அந்தநாள் என்னை வந்து சேர
இன்னும் எத்தனைநாளோ …?

என்னுடைய சரித்திரத்தில் இணைவதற்கும்
யோகம்வேண்டும் …

எத்தனைபேருக்கு
அது இருக்கோ இனிமேல்தான் காணவேண்டும் …

 தொடர்புடைய பதிவுகள்:

Comments