கண் தெரியாதவர் – நான் தோற்றத்தை பார்த்து
ஏமாந்தது கிடையாது..
காது கேளாதவர் – நான்
ஒட்டு கேட்டதே கிடையாது…
வாய் பேசாதவர் – நான்
பொய் பேசியதே கிடையாது..
குள்ளமானவர் – நான்
யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..
கை இல்லாதவர் – நான் யார் குறையையும்
பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..
கால் இல்லாதவர் – நான் காசு பணம் வந்ததும்
கால் மேல் கால் போடுவது இல்லை…
அதனால் தான்
எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்….!
Comments
Post a Comment