மாற்றுத்திறனாளி | ஊனம்

கண் தெரியாதவர் – நான் தோற்றத்தை பார்த்து
ஏமாந்தது கிடையாது..

காது கேளாதவர் – நான்
ஒட்டு கேட்டதே கிடையாது…

வாய் பேசாதவர் – நான்
பொய் பேசியதே கிடையாது..

குள்ளமானவர் – நான்
யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..

கை இல்லாதவர் – நான் யார் குறையையும்
பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..

கால் இல்லாதவர் – நான் காசு பணம் வந்ததும்
கால் மேல் கால் போடுவது இல்லை…

அதனால் தான்
எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்..

நீயோ ஊனம் என்கிறாய்….!

தொடர்புடைய பதிவுகள்:

Comments