தடம் மாறும் காதலும்
தடம் மாற்றும் காதலும்.
.
காதல் தேசம் இன்று
காம தேசமாக காண்கின்றேன்,
.
காதல் கண்ட மாத்திரத்தில்
காதல் கொள்ளும் காலம் அன்று,
.
கண்ட மாத்திரத்தில்
காமம் கொள்ளும் காலம் இன்று.
.
பருவ வாயிலின் மறுபக்கம்
சமூக சீர்கேடும் சலனமான வாழ்வியலும்,
.
பூ போன்ற புனிதமான காதல் இன்று
புரள்கின்றது காதல் எது என்பதை அறியாமலே
.
காதல் செய்கிறார்கள் காதலர்கள்.
தடம் மாறும் காதல் பலரை
தடம் மாற்றவும் செய்கின்றது,
.
வாழ்வியலில்
சந்தித்த வரலாறு ஒன்று உரைக்கின்றேன்.
.
நிமிர்ந்து நின்ற மங்கையிவள்
நீதியை நிலை நாட்ட துணிந்து நின்ற மங்கையிவள்,
.
புரட்ச்சிக்காக குரல் கொடுத்து
புது யுகம் படைக்க புறப்பட்டாள் புரட்ச்சியுடன்.
.
வாழ்வியலின் இடையிலே
வசமாக மாட்டி கொண்டாள்.
.
காதல் தேசத்தில் அல்ல,
இன்றய காம தேசத்தில்,
.
புளுவை புனிதமான பூ என நம்பினாள்
ஆலோசனைகள் எல்லாம்
அற்த்தமற்றதாக மாறியது
.
கையில் குழந்தையுடன் கைவிடப்பட்டாள்
கதறியளுது கண்ணீர் விட்டாள் புரட்ச்சி தலைவி
.
புளு என துடித்தாள்
வீர மங்கையின் விசித்திர கனவு
காதல் தேசத்தில் சாம்பலானது
.
சீரளிந்ததும் எம் தங்கை சீரளித்ததும் எம் தம்பி.
தண்டனை யாருக்கு…?
.
விழித்தெளுவோம்
எம் விழிகள் நிரந்தரமாக மூடப்பட முன்னர்.
.
(இந்த கவிதையை படிக்கும் பருவ பெண்கள் சற்று சிந்திப்பீர்)
(கனவை தொலைத்து காம போதைக்கு அடிமையாகதீர்)
.
.
நட்புடன்……………….
தொடர்புடைய பதிவுகள் :
Comments
Post a Comment