பொன்மொழிகள்-Tamil ponmozhligal

நான் பின்பற்றும் 10 வழிமுறைகள்:

1. உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காதே !!
மற்றும் உனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்றும்
நினைக்காதே !!
.
2.ஆபத்தில் பொய் சொல்ல தயங்காதே !!
பொய் சொல்லி ஒருவரிடமும் பழகாதே !!
.
3. கடவுளை நம்பு , கடவுளை மட்டுமே நம்பாதே !!
.
4. உன் மனசாட்சி மட்டும் தான் இந்த உலகில்
உண்மையான நீதிபதி என்பதை மறவாதே !!
.
5. நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் ,

உன் மனசாட்சியும் சரியென கூறினால்
அந்த கடவுளே இடையூறாக வந்தாலும் மதியாதே !!
.
6. முடியும் என்று நினைத்தால்
நிச்சயம் உன்னால் முடியும் !!
.
7. பணத்தை மட்டுமே தியாகம் செய் ,
உன் கொள்கையை தியாகம் செய்து விடாதே !!
.
8. நம்பிக்கையும் , மானத்தையும் இழந்து
உயிர் வாழ்வதே வீண் !!
.
9. தவறுகளை கண்டும் காணமல் செல்வது
நீ ஆண் இனமாய் பிறந்ததற்கே அவமானம் !!
.
10. நிமிர்ந்து நில் – உன் கோவம் நியாயமாய் இருந்தால் !!
துணிந்து பேசு – உன் கருத்து உண்மையாக இருந்தால் !!

.
இது நான் பின்பற்றி வரும் வழிமுறைகள் ,
உங்களுக்கும் பிடித்திருந்தால் பின்பற்றுங்கள் !!!
.
-நட்புடன் 
————————————————————————————-
Tamil kavithai theevu:

  • tamil ponmoligal
  • tamil palamoligal
  • tamil karuthukkal
  • valimuraikal
  • aravinth yohan karuthukkal
  • பொன் மொழிகள்

———————————————————————————–

 தொடர்புடைய பதிவுகள் :

Comments