Corruption in India-tamil kavithai-panamum indiavum
பணத்தால் தரை தட்டியது நீதியின் தட்டு
.
பணமற்றவனுக்கு சிறைக்குள் தட்டு!!
.
நேர்மையாய் இருந்தால் பணியிடை மாற்றம்
.
நேர்மையற்றவனுக்கு வாழ்கையில் முனேற்றம்!!
.
பணமிருந்தால் மருத்துவமனையில்
தரமான சிகிச்சை
.
பணமற்றவனுக்கு கடமைக்காக ஒரு சிகிச்சை!!
.
வயிற்று பிழைப்புக்கு 50, 100 திருடினால் திருடன்
.
பலகோடி திருடினால் தலைவன் !!
.
பணமுள்ளவனுக்கு வாய்தா என்ற பெயரில்
சுக வாழ்க்கை
.
பணமற்றவனுக்கு ஜெயிலுக்குள் சோக வாழ்க்கை !!
.
பணமிருந்தால் தரமான கல்வி
பணமற்றவனுக்கு அனுபவமே கல்வி !!
நாட்டிற்காக போர்முனையில் உயிரை தொலைக்கிறது
ஒரு கூட்டம்
.
எதிரி என தெரிந்தும் கொஞ்சி உறவாடுகிறது
மற்றொரு கூட்டம் !!
.
கற்பழிக்க பட்டவள் மரணத்தின் பிடியில்
.
கற்பழித்தவன் ஒரு மாதத்தில் ஜாமீனில் !!
.
உண்மையை மக்கள் அறிய சொல்லி
ஜெயிலுக்குள் சிலர்
.
ஜால்ரா அடிப்பதால் அரியணையில் பலர் !!
.
பணம் பேசிய பின்பே திறமைக்கு வாய்ப்பு
.
இதையெல்லாம் விட வேண்டுமா இந்தியாவிற்கு
அவமானம் வேறு !!!
———————————————————————————-
tamil kavithaigal:
- india arsiyal kodumai
- corruption in india
- tamil- indiyavil panam
- tamil kavithai about oolal
- makkal villipunarvu kavithai
——————————————————————————-
தொடர்புடைய கவிதைகள் :
————————————————————————————-
Comments
Post a Comment