உன் முதல் கண்ணீர் துளி
கன்னம் தாண்டி வழியும் நேரம்
உயிரின் பாரம் உடலினில் கண்டேன்!
உன் நீர் கோர்த்த விழிகளில் தானடி
மீன்விழியாள் உவமைக்கு அர்த்தம்
நானும் கண்டேன்!
செந்நீரில் துடிக்கும் இதயம் சிதறியது
வெந்நீரில் கொதிக்கும் சதையாய் பதறியது!
கண்ணீரில் இருக்கும் காதலை ரசிக்கவா
கன்னம் தாண்டும் கன்னி நீரை ருசிக்கவா
தோளோடு அணைக்கவா
துயரம் மறத்து நீயும் சிரிக்க வா!
என் கவிதைகளில் எல்லாம்
கருவானாய் எனக்கும் நீயே உயிரானாய்!
சாகா வரம் தேவையில்லை
சாகும் போதும் உன் நேச கரம் போதும்!
முப்பொழுதிலும் என் சினேகம் உணர வேண்டும்
மூப்பு பொழுதுகளிலும் நம் மோகம் மலர வேண்டும்..!
Comments
Post a Comment