Tamil kathal kavithai-கவிஞர். செந்தமிழ்தாசன்

கண்ணாமூச்சு ஆடத்தான் –
கண்ணேநீ ஓவியத்தில் ஒளிந்தாயோ ?! …

இல்லையென் கண்ணுக்குத்தான்-
அன்பேநீ ஓவியமாய் தெரிந்தாயோ ?! …

உன்னுதட்டு பள்ளத்தை –
எனக்கு ஒருநாளு தொட்டிலாக்கு …

மங்கையுன் பருவவிளக்கில் –
இவன் மரித்துப்போக விட்டிலாக்கு …

மைவைத்த புருவமுடியை –
இவன் கைவைத்து வருடவா ?! …

கைபடாதா உன்னழகை –
துளியும் நைபடமால் திருடவா ?! …

காதோரம் மெல்லவந்து –


உன் பிடரிமுடியை நெறுடவா ?!…

கண்ணே என் மூச்சுக்காற்றால் –
அதற்கும் கமத்தைநான் தருகவா ?! …

நெத்திப்பொட்டில் பாம்பைவைத்து –
எப்படி கொத்துகிறாய் விழியிரண்டால் ?! … ச

த்தியாமா சொல்லுறேன்டி –
எமனே பித்துப்பிடிப்பான் உன் முன் இருந்தால் ?! …

என்றும் எழுத்தாணி முனையில் …
கவிஞர். செந்தமிழ்தாசன்

Comments