Ninaivugal-சிறுவயது நினைவுகள்

அந்த காலம் தான் நன்றாக இருந்தது….! 
பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் ., 
.
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் 
பேருந்தில் உட்கார இடம் கிடைக்கும் .., 
.
மிதி வண்டி வைத்திருந்தோம்., 
.
எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்., 
.
கலைஞரின் அறிக்கைகளை தேடி படித்தார்கள்., 
.
எல்லா வீடுகளிலும் 

முதல் மரியாதை பாடல் ஒலித்தது.,

.
வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்., 
.
எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்., 
.
சாலையில் எப்போதாவது வண்டி வரும்., 
.
மழை நின்று நிதானமாக பொழியும் ,
.
சாராய கடைகள் இருந்தன.,ஆனால் 
இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை., 
.
தமிழ் ஆசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினர்., 
.
வேலைக்கு போகாதவன் 
எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை., 
.
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்., 
.
வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது., 
.
சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்., 
.
முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்., 
.
பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்.,
சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை., 
.
சுவாசிக்க காற்று இருந்தது.,
.
குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை., 
.
தெருவில் சிருமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். 
அவர்களை கலாய்த்து கொண்டே 
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்., 
.
மயில் இறகுகள் குட்டி போட்டன,புத்தகத்தில்., 
.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு 
அப்பாவிடம் அடி வாங்கினேன் .., 
.
மூன்றாம் வகுப்பிலிருந்துமட்டுமே,ஆங்கிலம்., 
.
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்., 
.
கடந்து தொலைந்து போனவை 
நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்.., 
நம்பிக்கைகளும்தான்………!!!!!!!!!! ♥♥
.
– படித்ததில் பிடித்தது
 ———————————————————————————–
Tamil kavithai theevu:
  • siru vayathu ninaivugal
  • vaalkaiyin alagaana tharunangal
  • magilchiyaana naatkal
  • kulanthai paruva ninaivukal
  • kadanthu pona naatkal
  • sirapaana nerngal

————————————————————————————-
தொடர்புடைய பதிவுகள் :

Comments